Logo
Logo

முக்கிய செய்தி:

பிரதமர் மோடியை விமர்சித்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கைது

PRITHIVIRAJ28-04-2024
பிரதமர் மோடியை விமர்சித்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கைது

பிரதமர் மோடியை விமர்சித்தமைக்காக பாஜகவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், பிகானிர் பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவராக இருந்த உஸ்மான் கானி, கடந்த வாரம் பிரதமர் மோடி மீது கடும் விமர்சனம் வைத்திருந்தார். இதனால் அவரை மாநில தலைமை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி வைத்தது.

இந்நிலையில் பிகானிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் தொடர்பாக போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தமைக்காக உஸ்மான் கானியை போலீஸார் கைது செய்தனர்.

pm-modi-to-address-rally-in-rajasthans-churu-today.jpg

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் வளங்களை, பிறசமூகத்தின் சொத்துக்களைப் பிரித்து முஸ்லிம்களுக்கு வழங்கும்”எனப் பேசினார்.

ஆனால் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருந்தார். ஆனால், அந்தத் தேதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவ்வாறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது தெரிந்தது.

பிரதமர் மோடியின் மதவாதக் கருத்துக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கண்டனம் தெரிவித்தன. தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க வேண்டும், நடத்தை விதிகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின.

ராஜஸ்தான் பாஜக மோர்ச்சா மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவராக இருப்பவர் உஸ்மான் கானி. கடந்த சில நாட்களுக்கு முன் புதுடெல்லியில் ஒரு சேனலுக்கு பிரதமர் மோடி பேசியது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்தார்.

1850199-bjp0001.webp

அப்போது கானி கூறுகையில் “ பிரதமர் மோடி பேசியது மிகுந்த வேதனையாக இருக்கிறது, அவரின் கருத்துகளைக் கண்டிக்கிறேன். பிரதமர் மோடியின் தேவையற்ற பேச்சால் பாஜக 3 அல்லது 4 தொகுதிகளில் தோற்கும். நான் முஸ்லிம்களிடம் வாக்குச் சேகரிக்கச் சென்றால், மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் பேச்சைக் குறிப்பிட்டு என்னிடம் பேசுகிறார்கள்,

அவரிடம் இருந்து எனக்குப் பதில் தேவை. ஜாட் சமூகத்தினரும் பிரதமர் மோடி மீது கோபமாக இருக்கிறார்கள், சுரு உள்ளிட்ட பல தொகுதிகளில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

உஸ்மான் கானியின் பேச்சு குறித்து பாஜக மாநில தலைமையிடத்துக்கு தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியை விமர்சித்தமைக்காக, சிறுபான்மைப் பிரிவு தலைவர் உஸ்மான் கானி மீது பாஜக நடவடிக்கை எடுத்து 6 ஆண்டுகளுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.

ஏபிவிபி அமைப்பில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்த உஸ்மான் கானி, 2005ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பிகானிர் மாவட்டசிறுபான்மைப் பிரிவு தலைவராக உஸ்மான் கானி இருந்தநிலையில் பிரதமர் மோடியை விமர்சித்தமைக்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் உஸ்மான் கானி மீது போலீஸார் ஒரு புகார் கொடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக விசாரணைக்காக முக்தா பிரசாத்நகர் காவல் நிலையத்துக்குஉஸ்மான் சென்றார். அங்கு போலீஸாருக்கும், உஸ்மான் கானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிட்டார்.

இதையடுத்து, சிஆர்பிசி 151 பிரிவின் கீழ் உஸ்மான் கானியை போலீஸார் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு உஸ்மான் கானி சிறையில் அடைக்கப்பட்டா்.

பாஜக மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் ஹமீது கான் மாவேடி கூறுகையில் “ உஸ்மான் கானி தனக்கு ஏதும் மனவருத்தம் இருந்தால், அதை முறைப்படி கட்சியில் தெரிவித்திருக்கலாம். கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து கொண்டு பிரதமர் மோடி குறித்து தவறான தளத்தில் இருந்து கொண்டு விமர்சித்தது தவறாகும். பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பது தவறு. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்கள் பயன் அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்