Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

சின்னம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் ஆணையத்தின் பாராபட்சம் நியாயமற்றது - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

SAMYUKTHA28-03-2024
சின்னம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் ஆணையத்தின் பாராபட்சம் நியாயமற்றது - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சின்னம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் ஆணையத்தின் பாராபட்சம் நியாயமற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் பெரியசாமி வெளியிட்ட அறிக்கை:

நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் ஒதுக்கீடு பெற்ற சின்னங்களை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தன. இந்த முறையீடுகள் மீது தேர்தல் ஆணையம் பாராபட்சம் காட்டாது, சார்பற்ற நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்பது பெரும் கவலை அளிக்கிறது.

இண்டியா கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு, பாஜக ஆதரவுக் கட்சிகளின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நியாயமற்ற நடைமுறைக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் களம் என்பது போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் அனைத்துக்கும் சம தளமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படிந்து விடாமல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, தேர்தல் நடைமுறைகளும் வாக்குப்பதிவும் நியாயமான, சுதந்திரமான முறையில் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக விரிவான புகார் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்