Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

வியாபாரியின் பைக்கை 2.5 கிமீ தூரம் இழுத்துச்சென்ற லாரி - டிரைவர் அதிரடி கைது

SAMYUKTHA18-04-2024
வியாபாரியின் பைக்கை 2.5 கிமீ தூரம் இழுத்துச்சென்ற லாரி - டிரைவர் அதிரடி கைது

வியாபாரி மீது மோதிய லாரி, அவரது பைக்கை சுமார் 2.5. கிலோ மீட்டர் இழுத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஓல்ட்சிட்டி சம்பா பேட்டா லட்சுமி கார்டன் அருகே அப்பகுதியை சேர்ந்த வியாபாரி முகமதுஅப்துல்மஜீத் (60) என்பவர் நள்ளிரவு பைக்கில் சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதிக் அப்துல்மஜீத் சாலையின் இடதுபுறத்தில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். ஆனால் அவரது பைக் லாரியில் சிக்கிக்கொண்டது. லாரியை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச்சென்றார். இதனால் முகமதுஅப்துல்மஜீத் வேகமாக சென்று லாரியின் பக்கவாட்டில் ஏறி நின்றுகொண்டு டிரைவரிடம் லாரியை நிறுத்தும்படி கூறினார். ஆனால் லாரி டிரைவர், லாரியை நிறுத்தாமல் மேலும் வேகமாக ஓட்டியுள்ளார். சுமார் 2.5 கிலோ மீட்டர் வாக்குவாதம் செய்தபடி சென்ற நிலையில் பைக்கும் இழுத்து செல்லப்பட்டது. சம்பாப்பேட்டை டி கிராஸ் சந்திப்பு அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே வந்த கார் மீது லாரி மோதி நின்றது. இந்த சம்பவத்தில் பைக் லாரியின் அடியில் சிக்கிய நிலையில் சாலையில் உராய்ந்து இழுத்து கொண்டு சென்றதில் நெருப்பு பொறிகள் பறந்தது. இதனை காரில் வந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அப்துல்மஜீத் சைதாபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்