முக்கிய செய்தி:
பொது
தொழிலதிபர் வீட்டில் ரூ.64 லட்சம் பறிமுதல்
புதுச்சேரியில் தொழிலதிபர் வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிாரிகள் திடீர் சோதனை நடத்தி ரூ.64.60 லட்சத்தை பறிமுதல் செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகர் 11வது குறுக்கு தெருவில் வசிதித்து வருபவர் புரந்தரதாசன். தொழிலதிபர். 3 மாடி கொண்ட வீட்டின் கீழ் தளத்தில் இவர் வசித்து வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டுக்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புரந்தரதாசன் வீட்டில் இருந்த ரூ.64.60 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இப்பணம் கடந்த ஆண்டு நிலம் விற்பனை செய்ததின் மூலம் கிடைத்ததாக புரந்தரதாசன் தெரித்து, அதற்கான சில ஆவணங்களையும் காண்பித்துள்ளார். ஆனால் அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்து ரூ64 லட்சத்து 60 ஆயிரத்தை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
டிரெண்டிங்
மேலும் பார்க்கசெய்திமடலுக்கு சந்தாதராகவும்
உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்