Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

டாப்சிலிப் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை - நாளை தேர்தல் வாக்குப்பதிவு

SAMYUKTHA18-04-2024
டாப்சிலிப் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை - நாளை தேர்தல் வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு டாப்சிலிப் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள டாப்சிலிப், வால்பாறை, சின்னக்கல்லார், கவியருவி உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம்.

வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும், டாப்சிலிப் வனப்பகுதியில் மிதமான வெயில் அடிப்பதால் அங்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், நாளை (19ம் தேதி) நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நாளை ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மற்றும் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நாளை ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்