Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

விசிக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.. கை துண்டானது... 9 பேர் கும்பல் வெறிச்செயல்

27-04-2024
விசிக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.. கை துண்டானது... 9 பேர் கும்பல் வெறிச்செயல்

சேந்தமங்கலம் அருகே, விசிக நிர்வாகியை 9 பேர் கும்பல் அரிவாளால் வெட்டியதில் கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பண ரோஜா(46).

சேந்தமங்கலம் அடுத்த சாலையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர். விடுதலை சிறுத்தை கட்சியின் சேந்தமங்கலம் தொகுதி அமைப்பாளராகவும் உள்ளார். நேற்று இரவு 10 மணியளவில், கடையை பூட்டி விட்டு, ஊழியர்கள் ராஜ்குமார், உதயகுமார், கோகிலனுடன், தனித்தனி டூவீலரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இரவு 11 மணி அளவில், 3 டூவீலர்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், பண ரோஜா உட்பட 4 பேரை வழிமறித்து தாக்கிய அந்த கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், பண ரோஜாவின் வலது கை தூண்டாகி விழுந்தது. சக ஊழியர்கள் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. பண ரோஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். வெட்டப்பட்ட கை சம்பவ இடத்திலேயே கிடப்பதை அறிந்து உறவினர்கள் அதனை எடுத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெட்டப்பட்ட கையை சேர்த்தனர். மேலும் உதயகுமாருக்கு கழுத்திலும், ராஜ்குமார் மற்றும் கோகிலனுக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது நாடாளுமன்றத் தேர்தல் பகையா? என்ற கோணத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்