Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

SAMYUKTHA28-04-2024
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறையவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும், அதனால் வட தமிழக உள் மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். அதனால் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்றும் சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. திருப்பத்தூர், சேலம் 107 டிகிரி, கரூர் பரமத்தி, தருமபுரி 105.8 டிகிரி, திருத்தணி, வேலூர் 104, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 103 டிகிரி வெயில் நிலவியது. தஞ்சை, கோவையில் தலா 102 டிகிரி, மதுரை, பாளையங்கோட்டையில் 101 டிகிரி, 14 மாவட்டங்களில் 100 டிகிரி மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 98 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 95.72 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதனால் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். 30ம் தேதி முதல் மே 1ம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 'வரும் 30ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். எனவே தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது' என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்