Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

₹1.5 கோடி நகை, ₹5 லட்சம் பணம் கொள்ளை - உளவு பார்த்த 2 பேர் கைது

SAMYUKTHA29-04-2024
₹1.5 கோடி நகை, ₹5 லட்சம் பணம் கொள்ளை - உளவு பார்த்த 2 பேர் கைது

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர், தனது வீட்டின் கீழ்த்தளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி மதியம் பிரகாஷ் தனியாக வியாபாரத்தை கவனித்துள்ளார். அப்போது காரில் வந்திறங்கிய 4 பேர் அடங்கிய மர்ம கும்பல் கடைக்குள் நுழைந்தது. பின்னர் அவர்கள் நகைகளை பார்ப்பது போல் நடித்து, நகைக்கடை உரிமையாளர் தனியாக இருப்பதை மர்ம கும்பல் கண்டறிந்தது. இதையடுத்து பிரகாஷிடம் 2 கைத்துப்பாக்கி முனையில் மிரட்டி, கடையின் முன்பக்க ஷட்டரை இழுத்து மூடியுள்ளனர்.

பின்னர் அக்கும்பல் கடைக்குள் இருந்த சிசிடிவி காமிராக்களின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து உரிமையாளர் பிரகாஷை சரமாரி தாக்கிவிட்டு, ஷோகேசில் விற்பனைக்கு வைத்திருந்த ₹1.5 கோடி நகைகள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ₹5 லட்சம் ரொக்கப் பணத்தை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளைடியத்து காரில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, 4 பேர் கொண்ட மர்ம கும்பலை 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். முதல் கட்ட விசாரணையில், இந்த மர்ம கும்பலுக்கு அதே பகுதியில் தங்கியிருந்த 2 பேர் உளவு பார்த்து தகவல் சொன்னதாக தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் புகைப்படங்களை வைத்து, கடந்த 2 நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் நகைக் கொள்ளையில் மர்ம கும்பலுக்கு உளவு பார்த்து சொன்ன ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (24), சேட்னாராம் (24) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் சென்னை கொண்டு வந்து விசாரித்தனர். பின்னர் நேற்றிரவு 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பிடிபட்ட 2 பேர் அளித்த தகவலின்பேரில், நகைக் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை தீவிரமாக வலைீசி தேடி வருகின்றனர். அவர்களிடம் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்