முக்கிய செய்தி:
பொது
நகை பறிமுதல் விவகாரத்தில் கோவை போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும் - மதுரை நீதிமன்றம் உத்தரவு
நகை பறிமுதல் விவகாரத்தில் கோவை சிங்காநல்லூர் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். நகை ஆசாரி. இவரது வீட்டிற்கு கடந்த 11.9.2023ல் சீருடை அணியாத போலீசார் சிலர் வந்துள்ளனர். அப்போது திருட்டு நகை எனக்கூறி சுமார் 15 பவுன் தங்க நகைகளை உடனடியாக தருமாறும், இல்லாவிட்டால் வழக்கு பதிவதாகவும் கூறி வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளை எடுத்து சென்றனர்.