Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

கணவனை இழந்தவர் செங்கோல் பெறக்கூடாது என எந்த ஆகம விதியில் உள்ளது? – மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி

SAMYUKTHA16-04-2024
கணவனை இழந்தவர் செங்கோல் பெறக்கூடாது என எந்த ஆகம விதியில் உள்ளது? – மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல் ராஜன் கணவனை இழந்தவர். அவரிடம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்த நாளில், செங்கோல் வழங்கக் கூடாது என மதுரையைச் சேர்ந்த தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணவனை இழந்தவர் செங்கோல் பெறக்கூடாதா? இது எந்த ஆகம விதியில் உள்ளது என கேள்வி எழுப்பினார். மதுரையை சேர்ந்தவர் தினகரன்த. இவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறது. இதன் 8ம் நாளான பட்டாபிஷேகம் விழாவில், செங்கோல் மீனாட்சி அம்மனிடம் வழங்கப்படும். அந்த செங்கோலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பெற்றுக் கொள்வது வழக்கம். இதில், ஆகம விதியின்படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ அந்த செங்கோலை பெற்றுக் கொள்ள இயலாது. தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனி தாயார். அவர் கணவரை இழந்தவர் என்பதால், கோயில் விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. வேறு தகுதியானவரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, நீதிபதி சரவணன், முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, இதுபோன்ற மனுவை ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில், 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தள்ளுபடி செய்துள்ளனர். எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். அதனை எதிர்த்து, தினகரனின் வழக்கறிஞர் வாதாடினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தனது உத்தரவை பிறப்பித்தார். அப்போது, நீதிபதி கூறியதாவது. திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? மேலும், கோயிலினுள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் வழக்கை தொடர்ந்திருப்பது ஏன்? இந்த காலத்திலும் இதுபோல கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல என கூறினார். மேலும்ட, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்