Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஏ.சி.சண்முகம் தொகுதிக்குள் நுழையவே முடியாது - கே.சி.வீரமணி மிரட்டல்

SAMYUKTHA28-03-2024
ஏ.சி.சண்முகம் தொகுதிக்குள் நுழையவே முடியாது - கே.சி.வீரமணி மிரட்டல்

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குடியாத்தம் பகுதியில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதற்கு என் மீதும் கட்சியின் மீதும் பொய்யாக குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். இதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். ஏ.சி.சண்முகம் பொய் குற்றச்சாட்டு சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நானே ரோட்டில் வந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். தொடர்ந்து அதிமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தினால் அவர் தொகுதிக்குள் நுழையவே முடியாதவாறு பெரிய பிரச்னை ஏற்பட்டு விடும். சொத்தை பாதுகாத்து கொள்வதற்காக தற்போது பாஜவில் ஐக்கியம் ஆகியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுக அலுவலக பக்கம் ஏ.சி.சண்முகத்தை அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கே.சி.வீரமணியின் மிரட்டலால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்