முக்கிய செய்தி:
பொழுதுபோக்கு
புதுச்சேரி சிறுமி உடல் நல்லடக்கம்.. பொதுமக்கள் அஞ்சலி..!
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு ஊரே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் சிறுமியின் உடலுடன் அவர் பயன்படுத்திய புத்தகப்பை பை மற்றும் பொம்மைகளும் சேர்த்து புதைக்கப்பட்டன.
புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2-ஆம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளான 9 வயது நிரம்பிய சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
புதுச்சேரி சிறுமி கொலையில் போலீஸார் மெத்தனமாக செயல்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
இந்த கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவிட்ட நிலையில், ஆவணங்களை பெற்றுக் கொண்டு சிறப்புக் குழு அதிகாரிகள், இன்று காலை விசாரணையை தொடங்கினர். ம ேலும், புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் பொய் தகவல்களை பரப்பக் கூடாது, மீறினால் அவர்களையும் இந்த வழக்கில் சாட்சியாக சேர்த்து விசாரிப்போம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் சிறப்புக் குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.