Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

அதிமுக நிர்வாகி அடித்து கொலை - கரூர் அருகே பயங்கரம்

SAMYUKTHA27-04-2024
அதிமுக நிர்வாகி அடித்து கொலை - கரூர் அருகே பயங்கரம்

கரூர் அருகே அதிமுக கிளை செயலாளர் அடித்து கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள அச்சமாபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(65). அதிமுக கிளை செயலாளர். இவரது மனைவி ராஜேஸ்வரி. சோமூர் ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர். இந்நிலையில், அச்சமாபுரத்தில் கொங்கலம்மன் கோயில் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அதே ஊரை சேர்ந்த மணிகண்டன்(38) என்பவர் ஊரில் குடி தண்ணீர் வரவில்லை. எனவே வார்டு உறுப்பினரான ராஜேஸ்வரியை இங்கு அழைத்து வாருங்கள் என்று கூறி ஆபாச வார்த்தையால் பேசி உள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட ராமலிங்கமும், அவரது மனைவியும் நேற்று அருகில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவரை தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா ஆகியோர் ராமலிங்கத்தை தாக்கி கீழே தள்ளினர். இதில் மயங்கிய ராமலிங்கத்தை சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரஞ்சிதாவை தேடி வருகின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்