Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

25,000 ஆசிரியர்களின் பணியை பறித்த பாஜவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

SAMYUKTHA27-04-2024
25,000 ஆசிரியர்களின் பணியை பறித்த பாஜவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்கத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியை பறித்த பாஜவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்.

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிமன்றம் விசாரித்து, '2016ம் ஆண்டு நடைபெற்ற 25,753 ஆசிரியர், அலுவலர் பணி நியமனங்களை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மக்களவை தேர்தல் நேரத்தில் வந்த இந்த தீர்ப்பு மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பிங்லா பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: ஆள்கொல்லி புலிகளை பற்றி நீங்கள் (மக்கள்) கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், மக்களின் வேலைவாய்ப்பை கொன்று உண்ணும் கட்சியை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? அதுதான் பாஜக. இந்த விஷயத்தில் நீதிமன்றம் குறித்தோ, நீதிபதிகள் குறித்தோ விமர்சிக்க விரும்பவில்லை. இந்த வழக்கின் பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளும் இதில் கைகோத்துள்ளன. அவர்கள்தான் 25,753 ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்து பணிகளை பறித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமான பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாஙைகள். புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசின் திட்டத்துக்கு எதிராகவும் பாஜக செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்க இளைஞர்கள் வேலையில்லாமல் கண்ணீர் வடிக்க வேண்டும் என்பதும், மேற்கு வங்க அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதும்தான் அவர்களின் நோக்கமாக உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்