Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

வீடு புகுந்து ரவுடி சரமாரி வெட்டி படுகொலை - 8 பேர் கும்பலுக்கு வலை

SAMYUKTHA27-04-2024
வீடு புகுந்து ரவுடி சரமாரி வெட்டி படுகொலை - 8 பேர் கும்பலுக்கு வலை

சென்னை தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடியை சரமாரி வெட்டி படுகொலை செய்த 8 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தண்டையார்பேட்டை சிவாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் லொட்டை (எ) ஆனந்த். இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி உட்பட 15க்கும் மேற்பட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது தனது மனைவியிடம் முட்டை தோசை போட்டு தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர், முட்டை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பைக்குகளில் வந்த 8 பேர் கும்பல், வீட்டுக்குள் புகுந்து உள்ளே இருந்த ஆனந்த்தை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் அவரது தலை, விலா எலும்பு, கைகளில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய ஆனந்தி, கணவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ஆனந்த் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சை சம்பவ இடத்துக்கு வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆனந்த் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் யார் கொலை செய்தார், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன்புதான் காசிமேடு பகுதியில் பட்டப்பகலில் இதேபோன்று கொடூர கொலை அரங்கேறியது. இந்நிலையில் நேற்று வீடு புகுந்து பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் கொலை நடந்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்