Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

நடிகை கங்கனா வென்றால் சன்னி தியோல் நிலைதான் - காங்கிரஸ் அமைச்சர் பரபரப்பு பேட்டி

SAMYUKTHA28-03-2024
நடிகை கங்கனா வென்றால் சன்னி தியோல் நிலைதான் - காங்கிரஸ் அமைச்சர் பரபரப்பு பேட்டி

இமாச்சலில் நடிகை கங்கனா வென்றால் நடிகர் சன்னிதியோல் போல் தனது எம்பி தொகுதிக்கு பொறுப்பாளரைத்தான் நியமிப்பார் என்று அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தெரிவித்தார். பிரபல நடிகை கங்கனா ரனாவத் மக்களவை தேர்தலில் பா.ஜ சார்பில் இமாச்சலபிரதேச மாநிலம் மண்டி தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அந்த தொகுதி எம்பியாக இமாச்சல் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் வீரபத்திரசிங் மனைவியும், தற்போதைய அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தாயாருமான பிரதீபா சிங் உள்ளார். அவர் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. 6 சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் இமாச்சலில் உள்ள 4 எம்பி தொகுதியில் தீவிர பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் மண்டி தொகுதியில் நிற்க தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில் அவரது மகன், அமைச்சர் விக்ரமாதித்ய சிங் நேற்று கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ சார்பில் வென்ற நடிகர் சன்னிதியோல் அந்த தொகுதியில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களில் தனக்கு பதில் ஒரு பிரதிநிதியை நியமித்தார். இது போன்ற சூழல் மாண்டியில் ஏற்படக்கூடாது என்று ராமரை பிரார்த்திக்கிறேன். மண்டி தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு முன் நன்றாக யோசிக்க வேண்டும். மழைக்கால பேரழிவின் போது மண்டி மக்களுக்கு உதவி தேவைப்படும் போது கங்கனா எங்கே இருப்பாா்?. இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்