Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

மக்களவை தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்..!

ESWAR27-03-2024
மக்களவை தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்..!

மக்களவை தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம் 2024 பொதுத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இரண்டாம் கட்டத்தேர்தலில் இடம்பெற்றுள்ளன.

12 மாநிலங்களில் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 4 அன்று கடைசி நாளாகும்.

ஜம்மு-காஷ்மீர் தவிர, 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 5 அன்று நடைபெறும். ஜம்மு-காஷ்மீரில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 6 அன்று நடைபெறும். வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 8 என்று கூறப்பட்டுள்ளது.

மக்களவை 2024 பொதுத் தேர்தலில் தேர்தல் நடைபெறவுள்ள 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கான அரசிதழ் அறிக்கை நாளை வெளியிடப்படும். 88 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று நடைபெறும்.

முதல் கட்டத்திற்கான அரசிதழ் அறிவிப்பில் மணிப்பூருக்கு வெளியே உள்ள பகுதிகளின் தேர்தலுக்கான அறிவிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மற்றொரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மக்களவையின் 15 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டம் அன்று தேர்தல் நடைபெறும். மக்களவையின் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மற்றொரு தொகுதிக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக அன்று தேர்தல் நடைபெறும்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்