Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

கார்த்தி சிதம்பரம் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுக்கு புதுப்பித்து தர வேண்டும் - மண்டல அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு

SAMYUKTHA28-03-2024
கார்த்தி சிதம்பரம் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுக்கு புதுப்பித்து தர வேண்டும் - மண்டல அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய வகையில் பாஸ்போர்ட்டை வழங்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தன் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்து தரக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால் மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, கார்த்தி சிதம்பரம் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாககூடிய வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க முடியாது. ஓராண்டுக்கு மட்டுமே புதுப்பிக்க முடியும் என்று வாதிட்டார். கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், பாஸ்போர்ட் சட்ட விதிகளின் படி 10 ஆண்டுகளுக்கு சொல்லத்தக்க வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து பெற உரிமை உள்ளது. அவ்வாறு புதுப்பிக்க ஒன்றிய அரசு மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று வாதிட்டார் இதையடுத்து நீதிபதி அனிதா சுமந்த், மனுதாரர் கார்த்தி சிதம்பரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட்டை நீட்டிக்க மறுப்பதற்கு உரிய காரணங்களை ஒன்றிய அரசு தெரிவிக்கவில்லை. ஒவ்வொருமுறையும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தை நாடும்போதும் நீதிமன்றம் விதிக்ககூடிய நிபந்தனைகளை இதுவரை அவர் மீறவில்லை. எனவே, கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி புதுப்பித்து தர வேண்டும். புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாட்டிற்கு செல்லும்போது வழக்கம்போல் உரிய மனுவை தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்